வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மியான்மார்: சைபர் குற்ற மையங்களில் சிக்கிய 14 இலங்கையர்கள் மீட்பு!


tamil news:

மியான்மார் மியாவாடியில் செயல்பட்ட சைபர் குற்ற மையங்களில் செயற்பட்ட கட்டாயப்படுத்தப்பட்ட 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


இவர்களின் மீட்பு நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியான்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதராலயங்கள், மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.


மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள், 2025 மார்ச் 18ஆம் திகதி நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கைக்கு இலங்கை அரசு மேற்கொண்ட தொடர் தூதரக முயற்சிகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.


2024 பெப்ரவரி 3ஆம் திகதி மியான்மார் துணைப்பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் மந்திரி உத் தன் ஸ்வே, மற்றும் 2025 பெப்ரவரி 13ஆம் திகதி தாய்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் மந்திரி மரிஸ் சங்கியம் பொங்க்ஸா ஆகியோருடன் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை மந்திரி விஜித ஹேரத் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார்.


இந்த சந்திப்புகளில் இலங்கையர்கள் மீட்பு மற்றும் நாடு திரும்புதல் தொடர்பாக உடனடி உதவி வழங்கும் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.



மியான்மார் மற்றும் தாய்லாந்து அரசுகளின் முக்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு தனது ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கின்றது.


மேலும், சர்வதேச குடியேற்ற நிறுவனம்(IOM) ஏவுகினி செலவு மற்றும் உள்போக்குவரத்து வசதிகளை வழங்கியதற்கும்,

மியான்மரில் உள்ள சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் இந்த மீட்பு பணியில் செய்த நலன்புரிச் செயற்பாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகின்றது.