ஏப்ரல் 5 இலங்கை வருகிறார் மோடி! பல முக்கிய திட்டங்களில் கைச்சாத்து?
tamil news:
முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் ஐந்தாம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி வருகையின் போது,
திருகோணமலையில் சம்பூர் மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறும்போது,
"இலங்கையில் சூரிய மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது.
இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின் போது கையெழுத்தாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்குமிடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாட் மற்றும் 70 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானம் உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை இலங்கை மின்சாரசபை இந்திய தேசிய வெப்ப மின்கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின்நிலையத்தை இந்தியா கட்ட இருந்தநிலையில்,
தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின்நிலையமாக மாற்றப்படுகின்றது.