உள்ளூராட்சி தேர்தல்: வவுனியாவில் ஐக்கிய மக்கள்சக்தியுடன் ACMC கூட்டணி, 5 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தியது!
tamil news:
நடப்பில் உள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு, வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC) கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக, ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிக்க கமகே, ACMC முக்கியஸ்தர்கள் பாரி, லரீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்