நாட்டில் கடுமையான அரிசி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை!
tamil news:
"நாடு முழுவதும் சுமார் ஏழு மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும்."
இவ்வாறு தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதாவது 2024 - 2025 ஆம் ஆண்டு பெரும்போக பருவத்தில் இரு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்பயிர்கள் அழிந்துள்ளதாகவும்,
இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 850,000 ஹெக்டர் அளவிற்கு நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும்,
வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட வடகிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20% வரை எதிர்பார்த்த விளைச்சல் இழப்பாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அறுவடைநேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளினால் நெல்வயல்கள் சேதமடைவதால் விளைச்சல் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரிசிப்பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த பருவத்தில் குறைந்தது சுமார் 7 லட்சம் ஹெக்டேகர் பரப்பளவில் நெல் பயிரிடல் மேற்கொள்ளப்படவேண்டும் என அனுராத்த தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தினசரி அரிசி தேவையானது 6,500 மெக்ரிக்தோன் என்பதுடன்,
ஆண்டுதோறும் 2,357,950 மெக்ரிக்தோன் அரிசி தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டின் அரிசி களஞ்சியம் குறையுமாயின் நாடு கடுமையான அரிசிப்பற்றாக்குறையை சந்திக்கநேரிடும் என்பதுடன் அரிசியை இறக்குமதி செய்யும்நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.