அதிக மாத்திரைகளை எடுத்த பாடசாலை மாணவி உயிரிழப்பு!
tamil news:
நேற்றையதினம்(10.03.2025) மாலை நல்லதண்ணி காவற்துறை பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரை உள்ளெடுத்தநிலையில் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மஸ்கெலியா நல்லதண்ணி காவற்துறைப்பிரிவிலுள்ள மறே தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சிறுமியின் வாய்ப்பகுதியில் நுரை வருவதை பெற்றோர் கண்டநிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளாரென மஸ்கெலியா மாவட்ட வைத்தியஅதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் சடலம் இன்று(11.03.2025) டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அந்த மாணவியின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென நல்லதண்ணி காவற்துறை நிலைய அதிகாரி பி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.