வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

போருக்கு ஆயத்தமாகுங்கள்! ஐரோப்பிய மக்களுக்கு பறந்தது அறிவுறுத்தல்


tamil news:

"போர் அல்லது இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் சுமார் மூன்று நாட்கள் வாழ்வதற்கு தேவையான பொருட்களை சேமிக்கவேண்டும்."

இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின்(EU) அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இந்த திட்டம் தொடர்பான அறிவித்தலை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனர்த்தமுகாமைத்துவ ஆணையாளர் 'ஹாட்ஜா லஹ்பிப்' அறிவித்துள்ளார்.


ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் நிலைப்பாடு


உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் விரைவில் ஒரு உலகளாவிய போராக மாறும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.


பிரான்ஸ், நோர்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் ஏற்கனவே எச்சரிக்கைகளை வழங்கியும்,

பயிற்சிகளை மேற்கொண்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்கள் வாழ்க்கை பாதுகாப்புக்காக சேமிக்கவேண்டிய முக்கிய பொருட்களை தற்சமயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அந்தவகையில் எரிபொருள், மீள்பாவனைக்குரிய மெழுகுவத்திகள் மற்றும் மின்விளக்குகள், அடையாள ஆவணங்கள்(ID), நீர்புகாத பைகள், பாட்டிலில் குளிர்ந்தநீர், சக்தியை பெற்றுக்கொள்ளக்கூடிய பொதியிடப்பட்ட உணவுப்பொருட்கள், மின்சாரமில்லா டார்ச் மற்றும் கூடுதல் பாட்டரிகள், மருந்துகள் மற்றும் முதலுதவிப்பெட்டி போன்ற பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


ஐரோப்பியநாடுகள் தனித்துவமாக மேற்கொண்ட ஏற்பாடுகளாக,

சுவீடன்

"நெருக்கடி அல்லது போர் வந்தால்" என்ற தலைப்பில் சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கியுள்ளது.


பிரான்ஸ்

குடிமக்களுக்கு போரின் போதான உயிர்பிழைப்பு வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


நோர்வே

வடக்கு பகுதி குடியிருப்பாளர்களுக்காக மாபெரும் வெளியேற்றல் பயிற்சிகளை நடத்தியுள்ளது.


டென்மார்க்

மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் நீர் போன்றவற்றை சேமிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


மேலும் ரஷ்யர்கள், உக்ரைன் போரை உலகளாவிய போராக மாற்றிவிட்டனர் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.


ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றால், அதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் அந்த ஆக்கிரமிப்பு முன்னேறலாம் என ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் உலகளாவிய நிலைமையை கருத்திற்கொண்டு யுத்தம், இயற்கைப்பேரழிவு, பெருந்தொற்று மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்றவற்றுக்கான தயார்நிலை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.