தென்னக்கோனுக்கு விசேட பாதுகாப்பு! உயிர் அச்சுறுத்தலா?
tamil news:
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
பள்ளிகலயில் உள்ள தும்பரா சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் அவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள திணைக்களம்,
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சிறப்பு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 28ம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம்,
காவற்துறை மாதிபர் உட்பட எட்டு பேருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.
அதன்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோன் ஏப்ரல் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.