அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! அதிரடி அறிவிப்பு
tamil news:
அரசு அச்சுக்கூட்டுத்தாபன அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இன்று(24.03.2025) முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிசபை தேர்தல் முடியும்வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படும் என அரச அச்சககூட்டுத்தாபன அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
அரச அச்சுக்கூட்டுத்தாபன அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,100 ஆகும்.
இதற்கிடையில் அரச அச்சகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அச்சகத்திற்குள் பாதுகாப்புக்காக காவற்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சககூட்டுத்தாபன அலுவலக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரச அச்சக அலுவலகத்திற்கு வெளியே காவற்துறை சிறப்பு படை நடமாடும் ரோந்து செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று(23.03.2025) தொடங்கியது.
மேலும் தேர்தல் ஆணையம் தற்போது மூன்று மாவட்டங்கள் தொடர்பான ஆவணங்களை அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.