பிரிட்டனின் தடை - கருத்து சொன்ன சுமந்திரன்!
tamil news:
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவர் உட்பட நான்கு பேரிற்கெதிராக பிரிட்டன் அரசு விதித்துள்ள தடையை வரவேற்பதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூர்ய, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு பேரின் மீதே பிரிட்டன் அரசு கடந்த திங்கட்கிழமையன்று(24.03.2025) தடைகளை விதித்தது.
இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு போரின்போது மேற்குறிப்பிட்ட நபர்கள் கடுமையான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதாக பிரிட்டன் அரசு ஏற்றுக்கொண்டு மனித உரிமைமீறல் செய்த நால்வரும் தடைசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தடையில், பிரித்தானியாவுக்கான பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும் நிலையில்,
"இதனை நான் வரவேற்கின்றேன்."
சுமந்திரன் தனது 'X' தள பதிவொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.