நாடு முழுவதும் போக்குவரத்து வலையமைப்பை உருவாக்க தீர்மானம்!
tamil news:
நாடு முழுவதும் 10 புதிய பல்வகையான போக்குவரத்து நிலையங்களைக் கொண்டு போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி மெறட்டுவை, ராகமை, கடவத்தை, கம்பகா, மாலம்பே, அத்துருகிரிய, கட்டுநாயக்க மற்றும் கட்டுநாயக்க புறநகர் பகுதிகளை மையமாகக் கொண்டு குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மேலும் கண்டி மாவட்டத்திலும், காலி மாவட்டத்தின் தெவட்ட பகுதியிலும் மேலும் இரண்டு பல்வகை போக்குவரத்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அனுராதபுரம் போக்குவரத்து நிலையத்தில் சுமார் 40% மேம்பாடுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும்,
மற்ற பல்வகை போக்குவரத்து நிலையங்களின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
