உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்!!!
tamil news:
எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு முன்னதாக நேற்றையதினம்(23.03.2025) நாட்டின் நான்கு வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.
நேற்றையதினம்(23.03.2025) தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக காவற்துறைக்கு சுமார் ஆறு முறைப்பாடுகள் கிடைத்தன.
அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை.
மாத்தளையில் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் வேட்பாளர்களின் படங்கள் கொண்ட சுவரொட்டிகள் பதாகைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கெபிட்டிகொள்ளாவ பகுதியில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளது.
பொலநறுவையிலுள்ள ஒரு பகுதியில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படுவதாகவும்,
மொனராகலையில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருப்பதாகவும் காவற்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.