அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது!
tamil news:
அனுரகுமார திசநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்றுவந்த ஓய்வூதியம் அடுத்தமாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற நிதி இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
அதாவது ஒரு ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவுசெய்திருந்தால் அவர் நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர்.
அதோடு அவர் ஓய்வுபெற்றவுடன் அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.
இவ்வாறு இரண்டு ஓய்வூதியங்களை பெற தான் விரும்பவில்லை என அனுரகுமார திசாநாயக்க கடந்த 21ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராக பெறும் ஓய்வூதிய பலன்களை நீக்குவதாக அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அந்த கடிதத்தினை அதன் நிதி இயக்குனருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.