எதிர்காலத்தில் பெண்கள் பேரூந்து மற்றும் ரயில் ஓட்டுநராக வாய்ப்பு! கூறுகிறார் அமைச்சர்
tamil news:
போக்குவரத்துத்துறையில் பெண்கள் பணியாற்ற ஏதுவாக புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்றையதினம்(07.03.2025) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 08) இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
தற்போது பேரூந்து மற்றும் ரயில்களில் பெண்கள் ஓட்டுநராக உள்ளதே குறைவு என்ற நிலையில்,
எதிர்வருங்காலத்தில் பெண்கள் பேரூந்து மற்றும் ரயில் ஓட்டுநராகவும்,
காவலராகவும் பணியாற்றுவதை காணலாம் என்ற நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், பள்ளி பேரூந்துகளுக்கு அதிகளவில் பெண்களை ஓட்டுநர்களாக ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு விவாதத்தில் கலந்து கொள்ளும்போதே அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.