தேசபந்துவை நீக்க அனுரவுக்கு உதவ தயார்! சஜித்
tamil news:
காவற்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் கொண்டுவந்த பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பேரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காவற்துறை மாஅதிபராக தென்னக்கோனின் பெயரை பரிந்துரைத்தபோது தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், நாடளுமன்ற உறுப்பினர் கபீர் காசிமும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
அவரது தவறான நடத்தை காரணமாகவே அவர்கள் அவரை எச்சரித்தனர்.
எனவே அவர் மீதான தங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்று அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்