பத்தாம் வகுப்பு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!
tamil news:
அரகங்விலயில் உள்ள ஒரு பாடசாலையின் கணித ஆசிரியர், 10 ஆம் வகுப்பு மாணவிகள் சுமார் 8 பேரினை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அரகங்வில கல்வி பிரிவுக்குட்பட்ட, திம்புலாகலை கல்வி மண்டலத்திலுள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றும் குறித்த ஆசிரியரை இன்றையதினம்(07.03.2025) காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் முறையிட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்