வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழ். பல்கலைக்கழகபேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!


tamil news:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இவர்களுடன் உபவேந்தர், பதிவாளர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள் இருவர் அடங்கிய உள்வாரி உறுப்பினர்கள் 15 பேருமாக மொத்தம் 31 பேர் பேரவையில் இடம்பெறுவர்.


நேற்றையதினம்(05.02.2025) முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களாக,

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்),

இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் - நிதி), 

ஏந்திரி திரு மதி எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டட திணைக்களம்),

ஏந்திரி.ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்),

வைத்திய நிபுணர் என். சரவணபவ (மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர்),

செல்வி ஷெரீன் அபதுல் சரூர் (எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளரும்),

கலாநிதி எம். அல்பிரட்(முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்,

ஏந்திரி அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்),

என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு),

திருமதி வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்துறை திணைக்களம்),

டி. கே. பி.யூ. குணதிலக முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சாரசபை), 

எம். ஜே. ஆர்.புவிராஜ் (முன்னாள் பணிப்பாளர், திறைசேரி),

பேராசிரியர் சி.சிவயோகநாதன் (வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்),

பி. ஏ. சரத்சந்திர (முன்னாள் அரச அதிபர், வவுனியா),

க. பிரபாகரன் (சட்டத்தரணி),

ஏ.எம்.பி. என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்)

ஆகியோர் உள்ளனர்.


1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடு களுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஓர் உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும்.


பல்கலைக்கழகப்பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஒரு பட்டதாரியாக இருத்தல் வேண்டும் அல்லது முகாமைத்துவத்தில் மீயுயர் தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத்தகுதியுடன்,

பால்நிலை சமத்துவம், சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன், சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனையுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற வரையறை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வரையறுக்கப்பட்டிருக்கின்ற போதிலும்,

ஆட்சியதிகாரத்திலுள்ள கட்சிகளின் சிபார்சின் அடிப்படையிலேயே இதுவரை காலமும் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுவந்துள்ளமையும், யாழ்ப்பாணத்தில் மிக நீண்டகாலமாக அமைச்சர் ஒருவரின் செல்வாக்கில் நியமனங்கள் வழங் கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.