கார் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை!
tamil news:
யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்றிரவு(17.03.2025) கடுமையான கார் விபத்தொன்று ஏற்பட்டது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான காரில் கனடாவில் இருந்து வந்த ஒரு பெண்,
அவரது கணவர் மற்றும் அவர்களின் 5 வயது குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
முடிவின்றி பயணித்துவந்ததால் ஏற்பட்ட தூக்கக்களக்கம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்