கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!!!
tamil news:
அரசியற்கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போது கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட எழுத்துமூலமுறைக்கு மேலதிகமாக இலகுவாக கையடக்கத்தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் மன்னார் பூநகரி மற்றும் தெகியத்தகண்டி பிரதேச சபைகளுக்கு வேட்பு மனுக்கள் மார்ச் 24ம் திகதி முதல் மார்ச் 27ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதிநாளாக மார்ச் 26ம் திகதி நண்பகல் 12 மணி என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.