நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வந்தார்!
tamil news:
தமிழ்நாட்டின் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் இன்றையதினம்(11.03.2025) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகின்றது.
இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார்.
மேலும் அவர் வெள்ளவத்தை மற்றும் வத்தளை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஆடை விற்பனை அங்காடி ணுருணுஐ ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க உள்ளார்.
இதேவேளை, கீர்த்தி சுரேஷுடன் நடிகர் ரவிமோகனும் இலங்கைக்கு வந்துள்ளார்.
அதுமட்டுமன்றி நேற்றையதினம்(10.03.2025) நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோர் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
சினிமா