அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை மற்றும் வானிலையின் மாற்றங்கள்!
weather report:
அடுத்த 36 மணிநேரத்தில் நாடளாவியரீதியில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு
தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
அதேநேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது உருவாகக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்காக, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.