கிளிநொச்சியில் பேருந்தின் மீது தாக்குதல்!
tamil news:
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசபோக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றையதினம்(09.04.2025) கிளிநொச்சியின் உமையாள்புரம் பகுதியை ஒட்டிய ஏ-09 வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.