புதுக்குடியிருப்பில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மகத்தான வரவேற்பு!
tamil news:
கற்பிட்டி பிரதேசசபைத்தேர்தலில் புதுக்குடியிருப்பு, டச்பே மற்றும் முகத்துவார கிராமங்களை உள்ளடக்கிய பள்ளியாவத்தை வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக மரச் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலுக்கு புதுக்குடியிருப்பு கிராமமக்கள் வரவேற்பளித்தனர்.
கடந்த திங்கட்கிழமை(14.04.2025) புதுக்குடியிருப்பு கிராமத்து பெண்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மேற்படி வரவேற்பு நிகழ்வில் கற்பிட்டி நகர தலைமை வேட்பாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில் மற்றும் பட்டியல் வேட்பாளர் எம்.டி றிப்கான் ( றஹ்மானி) ஆகியோருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்