டொனால்ட் ட்ரம்ப் மீது எதிர்ப்பு: அமெரிக்க மக்களிடம் இருந்து பரவலான எதிர்வினை!!!
tamil news:
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கும், நடைமுறைகளுக்குமான எதிர்ப்பு காரணமாக நாடு முழுவதும் மக்கள் பரபரப்பான எதிர்ப்பு பேரணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு தழுவிய முறையில் இன்றையதினம்(06.04.2025) நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் மக்கள் கூடுவதை காணக்கூடியதாக இருந்தது.
பொஸ்டன், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களில் வெகுவிரிவான மக்கள் கூடல் இடம்பெற்றதாக அறியப்படுகின்றது.
ட்ரம்ப் தனது பதவியை மீண்டும் ஏற்றதிலிருந்து, இந்த அளவிலான வலுவான எதிர்ப்பாகும் என சில அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அவரின் நிர்வாக செயல்பாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் குழப்பங்களை நோக்கி மக்கள் கவனத்தை திருப்ப முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.