வடக்கு பகுதியில் விளையாட்டு ஆர்வம் குறையும் நிலை: ஆளுநர் கவலை
tamil news:
வடக்கு மாகாணங்களில் விளையாட்டு ஆர்வம் குறைவதைக் காணமுடிகின்றது என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று பேசிய அவர்,
இன்றைய இளைஞர்கள் சமூகப் பிணைப்புகளில் இருந்து விலகி செல்கிறதற்குக் காரணமாக விளையாட்டுகளில் பங்கேற்பின்மையே உள்ளது என குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இளையோர் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கினால்,அவர்களிடம் சமூக ஒழுக்கம், ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவத் திறன்கள் மேம்படும்.விளையாட்டுக்கள் வெறும் பொழுதுபோக்கல்ல; இவை வாழ்க்கை நெறிகளை கற்றுத் தரக்கூடியவை.விளையாட்டில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பொதுவாக மற்றவர்களை மதிக்கும் பண்பையும் பெற்றிருப்பர்"
என்றார்.