சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மெட்டா!
tamil news:
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு, மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையின் கீழ், 16 வயதிற்குட்பட்டவர்கள் பேஸ்புக், மெசேஜர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிளாட்ஃபாரங்களை பயன்படுத்தும் விதத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
புதிய அம்சத்தின் மூலம், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் சமூக ஊடக கணக்குகளை நேரடியாக கண்காணிக்க முடியும்.
பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்கள் நேரலை செய்யும் விஷயங்களுக்கும்,
மெசேஜர் மூலம் புகைப்படங்களை பகிர்வதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பெற்றோர்கள் தங்கள் கணக்குகளை பிள்ளைகளின் கணக்குகளுடன் இணைத்து கண்காணிக்கும் வகையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இது முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மெட்டா தெரிவித்துள்ளது.