பல பகுதிகளில் காவற்துறை வலைவீச்சு; பலர் கைது!
tamil news:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றையதினம்(18.04.2025) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகங்கள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 92 பேர் ஹெரோயின், 75 பேர் ஐஸ், 70 பேர் கஞ்சா, ஒருவர் ஹேஷ் மற்றும் மூவர் குஷ் போதைப்பொருட்களுடன் இருந்துள்ளனர்.
இதேநேரத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் 91.89 கிராம் ஹெரோயின்,
131.22 கிராம் ஐஸ்,
2.096 கிலோ கஞ்சா,
2 கிராம் ஹேஷ் மற்றும் 5.248 கிராம் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் போதைப்பொருள் விரோத நடவடிக்கைகள் தொடரும் எனவும்,
பொதுமக்களின் ஒத்துழைப்பு இவ்விசேட நடவடிக்கைகளுக்கு முக்கியமானது எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.