கற்குவாரி தூசுகள் வைத்திருந்த தொழிலதிபரை விசாரித்த காவற்துறை!
tamil news:
வவுனியா மாவட்டம், ஓமந்தை பகுதியில் இயங்கிவரும் ஒரு கல்லரியும் நிலைய உரிமையாளரை அவரது நிலையத்தில் சேமித்துவைத்திருந்த கற்குவாரி தூசுகளுக்காக காவற்துறை அதிகாரி ஒருவர் விசாரித்த சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கொந்தக்காரன்குளம் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதிக்கு சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய தொழிற்சாலையில் கல் அரியும் பணிகளில் பயன்படுத்துவதற்காக மணல், சீமெந்து, மற்றும் கற்குவாரி தூசுகளை கொள்வனவு செய்து சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் சிவில் உடையில் அங்குவந்த ஓமந்தை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சேமித்து வைக்கப்பட்டிருந்த கற்குவாரி தூசுகளின் வரவுகளைப் பற்றி உரிமையாளரை கேட்டுள்ளார்.
அந்த வேளையில் உரிமையாளர் அந்த தூசுகள் ராஜபக்ஸ என்ற கற்குவாரி உரிமையாளரிடம் இருந்து வாங்கியவை எனவும்,
பொருட்கள் வந்தபோது பொதுவாக எந்தவொரு பற்றுச்சீட்டும் வழங்கப்படுவதில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு அந்த அதிகாரி குறித்த உறுதிப்பத்திரங்களை காண்பிக்குமாறு வலியுறுத்தியதுடன் தேவையான ஆவணங்கள் இல்லையெனில் பிரச்சனை ஏற்படும் எனவும் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.