யாழ்ப்பாணத்தில் ஒரு நேரத்தில் மூன்று கன்றுகளை பெற்ற பசு!
tamil news:
யாழ்ப்பாணம், வடமராட்சியில் அபூர்வமாக ஒரு பசு ஒரே பிரசவத்தில் மூன்று கன்றுகளை பெற்றுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரிய நிகழ்வு உடுப்பிட்டி – இலக்கணாவத்தைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் பதிவாகியுள்ளது.
பொதுவாக பசுக்கள் ஒரே தடவையில் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளைப் பெறுவதே வழக்கம்.
இதுபோல மூன்று கன்றுகளை ஒரே சமயத்தில் பெறுவது மிக அரிதாகவே காணப்படுகின்றது.
பசுவும் அதனால் பிறந்த மூன்று ஆரோக்கியமான கன்றுகளும் தற்போது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அருகிலுள்ள கிராமவாசிகள் பலரும் வந்து இந்த அபூர்வ நிகழ்வைப் பார்த்து வியப்புடன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.