ஜனாதிபதியின் கருத்துக்கு பெப்ரல் அமைப்பின் கண்டனம் – வாக்காளர்களுக்கு மறைமுக அழுத்தமா?
tamil news:
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் வாக்காளர்களுக்கு அழுத்தம் அளிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்(PAFFREL) தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக தேசிய மக்கள்சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துவருகின்றார்.
இவ்வகை பேச்சுகள், வாக்காளர்களை பாதிக்கக்கூடிய மற்றும் தேர்தல் சட்டத்தின் 82வது பிரிவுக்கு முரணான செயலாக இருக்கலாம் என பெப்ரல் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
நேர்மையும், நடுநிலையையும் வலியுறுத்தி அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், இவ்வாறான பரிந்துரைகள் முன்வைப்பது கவலையளிக்கக்கூடியது என்றும், ஜனநாயகத்திற்கே சவாலாக இருக்கக்கூடும் என்றும் பெப்ரல் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.